26 C
Chennai
December 8, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் 25 தமிழ்நாடு மீனவர்கள் கைது

செஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் மேலும் 25 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியின் தூத்தூர், பூத்துறையை சேர்ந்த நாயகம், அந்தோணி ஆகியோர் இரண்டு படகுகளில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி செஷல்ஸ் நாட்டு கடற்படையினர் இரு படகுகளில் இருந்த 25 மீனவர்களை கைது செய்துள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்


இதுவரை செஷல்ஸ் நாட்டு கடற்படையால் 5 விசைப்படகுகளுடன் 33 தமிழ்நாடு மற்றும் 25 வடமாநில மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே சமயம், செஷல்ஸ் நாட்டு கடற்படையால் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள 33 தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி கன்னியாகுமரி மீனவர்கள் உட்பட 25 பேர் செஷல்ஸ் நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy