பொதுமக்கள் எப்போதும் எளிதாக தன்னை அணுக முடியும் என்றும், மக்களின் குறைகளை தீர்க்க தொடர்ந்து பாடுபடுவேன் என்று கூறி, அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான செல்லூர் ராஜூ வாக்கு சேகரித்தார்.
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் திமுகவைச் சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் அமைச்சரும் மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளருமான செல்லூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இந்நிகழ்ச்சியில் பேசிய செல்லூர் ராஜூ, முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம் என்றார். பொதுமக்களின் குறைகளை தீர்க்க முழு மூச்சுடன் தான் பாடுபடுவேன் என்றும் செல்லூர் ராஜூ உறுதி அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்