திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பு; தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பாமக கவுன்சிலர்கள்

விழுப்புரம் மாவட்டம், கானை ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில், திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பதாகக் கூறி, அ.தி.மு.க மற்றும் பாமக கவுன்சிலர்கள் இருவர் தரையில்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காணை ஊராட்சி…

விழுப்புரம் மாவட்டம், கானை ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில், திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பதாகக் கூறி, அ.தி.மு.க மற்றும் பாமக கவுன்சிலர்கள் இருவர் தரையில்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காணை ஊராட்சி ஒன்றிய குழு அலுவலகத்தில் இன்று  ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வி தலைமையில், ஒன்றிய
கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே பாமக ஒன்றிய கவுன்சிலர் குபேந்திரன் மற்றும் அ.தி.மு.க கவுன்சிலர் பர்குணன் ஆகிய இருவரும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் திட்டப்பணிகள் வழங்காமல் புறக்கணிப்பதாகவும், கடந்த கூட்டத்தின் போது ஒவ்வொரு கவுன்சிலர்களுக்கும் 2 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தி.மு.க கவுன்சிலர்களுக்கு மட்டுமே வழங்கப்படுள்ளதாகவும், மாற்று கட்சியைச் சார்ந்தவர்களுக்கு வழங்கவில்லை எனவும் கூறி, ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் இரு கவுன்சிலர்களும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலையே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது. கானை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் எப்போது நடைபெற்றாலும், தி.மு.கவின் கவுன்சிலர்கள் 18 பேர் இருப்பதால் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்படுவதாகக் கூறி, அரை மணி நேரத்திற்குள் கூட்டத்தினை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கலைச்செல்வி முடித்துவிடுவதாக இரு கவுன்சிலர்களும் குற்றம்சாட்டினர்.
-சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.