லோன் ஆப் மூலமாக மோசடியில் ஈடுபட்ட வட மாநிலங்களை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜுவால் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், ஹரியானா, பரிதாபாத் உள்ளிட்ட இடங்களில் இருந்து லோன் ஆப் செயலிகள் மோசடியில் மிகப்பெரிய நெட்வொர்க் போன்று செயல்பட்ட அண்ணன் தங்கை உட்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜுவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, லோன் ஆப் மூலம் அதிக வட்டிக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இதனை வசூலிக்க தனியார் ஏஜென்சி செயல்படுகின்றனர். பணம் வாங்கிய நபர்கள் போட்டோவை மார்பிங்க் செய்து மோசடியில் செயல்படுவது தெரியவந்தது. பின்னர் அந்த நபர்கள் 937 செல்பொன் எண்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி இருக்கின்றனர். மேலும் 200 UPI Id-ஐ பயன்படுத்தி இருக்கின்றனர். அவர்களுக்கு கீழ் 50 பேர் வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் வரை பணபரிவர்த்தனை செய்கிறார்கள் என கண்டுபிடிக்கப்பட்டது.
அது தொடர்பாக நான்கு பேர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பின் பெரிய மோசடி கும்பல் உள்ளது. பீகாரில் அந்த கும்பல் பதுங்கியுள்ளது. அவர்களை கைது செய்ய உள்ளோம் என அவர் தெரிவித்தார். இந்தியா முழுவதும் 45 ஆயிரன் பேர் லோன் ஆப் மூலம் பாதிக்கபட்டுள்ளனர்.
பாஸ் ஸ்கேம் குறித்து 4 புகார்கள் வந்துள்ளன. எனவே, பொதுமக்கள் லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என சங்கர் ஜுவால் அறிவுறுத்தினார். லோன் ஆப் மோசடி தொடர்பாக இது வரை 6 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், லோன் ஆப்கள் குறித்து கூகுளில் தெரிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
– இரா.நம்பிராஜன்








