சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரை இணைப்பது அதிமுக அமமுக இடையேயான விவகாரம் என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வராது என்றும் கூறினார். சட்டமன்ற தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றும் திமுக எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வராது என்றும் கூறினார். 2 ஜி போன்ற மிக பெரிய ஊழல் செய்யவா திமுக ஆட்சிக்கு வர நினைக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், திமுக தமிழர்களுக்கு எதிரானது என குற்றம்சாட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சசிகலா – டி.டி.வி தினகரனை இணைப்பது அதிமுக அமமுக இடையான விசியம், அதில் நாங்கள் தலையிடவில்லை என்றும்
பா.ஜ.விற்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். மேலும்
திமுக எந்த காலத்திலும் தமிழகத்தில் ஆட்சிக்கு வராது, இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்றார்.
நில அபகரிப்பு, 2 ஜி போன்ற மிக பெரிய ஊழல் செய்யவா திமுக ஆட்சிக்கு வர நினைக்கிறது எனக் கேள்வி எழுப்பியவர், திமுகவை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் 2009ல் இலங்கையில் தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதற்கு திமுக தான் காரணம், திமுக தமிழர்களுக்கு எதிரானது எனக் குற்றம்சாட்டினார்.
திமுகவின் தோல்வி நிர்ணயிக்கப்பட்டது தோல்வி என்று அவர் அப்போத குறிப்பிட்டார்