ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்த சேலம் அதிமுகவினர்!

எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து பெரியகுளம் ஓபிஎஸ் இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் உட்கட்சி…

எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்து பெரியகுளம் ஓபிஎஸ் இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் உட்கட்சி பூசல் வெடித்தது. இதையடுத்து கடந்த 11ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக தலைமை கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஓ.பி.எஸ்ஐ அதிமுகவிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தற்போது அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டி உள்ள சூழலில் அதிமுக பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சற்றும் எதிர்பாராத விதமாக எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் உள்ள அவரது இல்லத்தில் சேலம் மாநகர மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி, சேலம் ரவி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அரசியல் வட்டராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.