31.9 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

சபரிமலையில் 28 நாள்களில் ரூ.134 கோடி வருவாய்: தேவசம் போர்டு

சபரிமலையில் 28 நாள்களில் ரூ.134.44 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக  திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வார்கள். கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது முதல் பக்தர்கள் கூட்டம் சபரிமலையில் அதிகரித்தது.  ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நடைதிறக்கப்பட்ட முதல் 28 நாள்களில் பக்தர்கள் வருகை மற்றும் வருமானம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மாறாக,  வருமானம் ரூ.20 கோடிக்கு மேல் குறைந்துள்ளது.  திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், கடந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் ரூ. 154.77 கோடியாக இருந்த வருமானம் இந்த ஆண்டு ரூ. 134.44 கோடியாக உள்ளது.

மொத்த வருவாயில் அப்பம் விற்பனை மூலம் ரூ.8.99 கோடியும்,  நன்கொடையாக ரூ.41.80 கோடியும் கிடைத்துள்ளது.  அரவண பாயாசம் விற்பனை மூலம் ரூ.61.91 கோடியும், தங்கும் விடுதிகளின் வருமானம் மூலம் ரூ.34.16 லட்சமும் கிடைத்துள்ளது.  இந்த ஆண்டு ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவு மூலம் ரூ.71.46 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இலவச உணவு வழங்கும் திட்டம் (அன்னதானம்) நடத்துவதற்கான பங்களிப்பும் கடந்த சீசனில் ரூ.1.20 கோடியிலிருந்து ரூ.1.14 கோடியாக குறைந்துள்ளது.

பக்தர்கள் வருகை குறைவு

சபரிமலையில் எதிர்பார்த்ததை விட குறைவான எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகையே வருமானம் குறைவுக்கு காரணம்,  நடைப்பயணமாக வரும் பக்தர்களின் வருகையும் குறைந்துள்ளது.  இந்த ஆண்டு இதுவரை 18.16 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.  கடந்த முறை இதே கால கட்டத்தில் பக்தர்களின் வருகை 18.88 லட்சமாக இருந்தது.  அதிகபட்சமாக டிசம்பர் 8-ம் தேதி 88,744 பேர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.

“சென்னை வெள்ளம் மற்றும் தெலங்கானாவின் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக முதல் 2 வாரங்களில் எதிர்பார்த்ததை விட பக்தர்களின் வருகை குறைவாகவே இருந்தது.  வாக்குப்பதிவுக்குப் பிறகு, பக்தர்களின் வருகை அதிகரித்தது.  உதாரணமாக, அரவண விற்பனை ஒரு நாளைக்கு 2.25 லட்சம் டின்களில் இருந்து 3.25 லட்சம் டின்களாக உயர்ந்துள்ளது.  டிசம்பர் 12-ம் தேதி 4.25 லட்சம் டின்கள் விற்கப்பட்டு விற்பனை உச்சத்தை எட்டியது” என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading