மலையாள வருட பிறப்பு மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று மாலை நடைதிறக்கபட்டடுள்ளது.
சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தினந்தோறும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து நாள் ஒன்றுக்கு 10,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,
கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என உறுதி செய்த சான்றிதழ் மிகவும் அவசியம். சபரிமலை கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதியளித்தநிலையில், 18ம் தேதி வரை நடைத்திறக்கப்பட்டுள்ளது. மேலும் 14ம் தேதி விஸு க்கான பூஜைகள் நடைபெறுகிறது. இதனையடுத்து ஆர் டி பி சி ஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.







