முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோயில்களுக்கு சொந்தமான ரூ.600 கோடி சொத்துக்கள் மீட்பு: சேகர்பாபு

கோயில்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலம் மற்றும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரி முருகன் கோயில் மற்றும் எருமைவெட்டி பாளையம் வரமுக்த்தீஸ்வரர் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, 12 ஆண்டுகளுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடத்தாத அனைத்து கோயில்களிலும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயில் சொத்துக்கள் அனைத்தும் மீட்கப்படும் என தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, இதுவரை கோயில்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் நிலங்கள் மற்றும் 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram