காரைக்குடி அருகே திருட வந்த வீட்டிற்குள் மது குடித்து விட்டு மெத்தையில் படுத்து தூங்கிய திருடன் மாட்டிக் கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், குடும்பத்துடன் காரைக்குடி பர்மா காலனியில் வசித்து வருகிறார். இந்நிலையில், நடுவிக்கோட்டையில் உள்ள வீட்டின் வெளிக்கதவு திறந்திருப்பதை கண்ட அருகில் வசிப்பவர்கள் வெங்கடேசனுக்கு தகவல் தெரிவித்தனர். வீட்டிற்கு வந்த வெங்கடேசன்
வீட்டை திறக்காமல் நாச்சியாபுரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த நாச்சியாபுரம் காவல்துறையினர் வீட்டின்
உள்ளே சென்று பார்த்த போது, அதே ஊரைச் சேர்ந்த அஞ்சம்மை என்பவரது மருமகன் சுதந்திரதிருநாதன் என்பவர் பொருட்களை திருடி மூட்டையாக கட்டி வைத்துவிட்டு மது அருந்திய நிலையில் அசந்து தூக்கிக் கொண்டிருந்தார். இதனையடுத்து, அவரதை தட்டி எழுப்பிய போலீசார், கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிக்கவும்: ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு கோலில் 3.6 ஆக பதிவு
இந்நிலையில், திருட வந்த இடத்தில் ஹாயாக மது அருந்திவிட்டு தூக்கம் போட்டு மாட்டிக் கொண்ட திருடன் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.







