இந்தியாவிலிருந்து நடப்பாண்டில் 3,537 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாசுமதி அரசி மற்றும் 6,133.63 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மற்ற அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அரிசியின் மொத்த அளவுகள் குறித்தும் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது? அதனால் ஈட்டப்பட்ட வருவாய் குறித்தும் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமா கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்துள்ள மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல், ஈரான், சவுதி அரேபியா, ஈராக், ஓமன், அமெரிக்கா, குவைத், இங்கிலாந்து, கத்தார், கன்னடா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 21 நாடுகளுக்கு 2021-22 நிதி ஆண்டில், 3,537.49 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாஸ்மதி அரிசி இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் வங்காள தேசம், சீனா, நேபால், வியட்நாம், இலங்கை, சோமாலியா, மலேசியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 23க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாஸ்மதி அல்லாத 6,133.63 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அரிசி வகைகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் எழுத்துப்பூர்வமா முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.








