முக்கியச் செய்திகள்இந்தியா

“வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும்” – ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன்!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பயன்பாடு குறித்து தொடர் புகார்கள் எழுந்து வரும் நிலையில், வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் என ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஜனநாயக அமைப்புகளை கைப்பற்றி வருகிறார்கள். இந்த சூழலில் வெளிப்படையான தேர்தல் செயல்முறைகளில் மட்டுமே பொது மக்களுக்கான பாதுகாப்பு உள்ளது. இவிஎம் இயந்திரங்கள் தற்போது கருப்பு பெட்டியாக உள்ளன. தேர்தல் ஆணையம் இந்த இயந்திரங்கள் மற்றும் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை ஒழிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதே போல சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்பட பல தலைவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படலாம் என்று தங்களது அச்சத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரும், ஆந்திரா மாநில முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டியும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், “மேம்பட்ட ஜனநாயக நாடுகளில் தேர்தல் நடைமுறைகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால் அல்ல, காகித வாக்குச்சீட்டுகளால் ஆதரிக்கப்படுகின்றன. நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை நிலை நிறுத்தும் நோக்கத்துடன் இந்தியாவும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைவிட வேண்டும். நீதி வழங்குவதை உறுதி செய்வதுடன், அதன் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

ஹெலிகாப்டர் விபத்து; கேட்காமலேயே ஓடி வந்து உதவிகளை செய்த தமிழ்நாடு – தென் மண்டல பிராந்திய தளபதி அருண்

Arivazhagan Chinnasamy

வெள்ள நீரில் மூழ்கிய தரைப்பாலம்; போக்குவரத்து துண்டிப்பு

EZHILARASAN D

மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசும், புதுச்சேரி அரசும் உடனிருக்கும் – ஆளுநர் தமிழிசை

EZHILARASAN D

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading