நாட்டில் 79% குறைந்த சில்லறை விற்பனை!

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சில்லறை விற்பனை 79% குறைந்துள்ளதாக இந்திய சில்லறை விற்பனை அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய சில்லறை விற்பனை அமைப்பான (Retailers Association of India (RAI)) நடத்திய ஆய்வில்…

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக சில்லறை விற்பனை 79% குறைந்துள்ளதாக இந்திய சில்லறை விற்பனை அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்திய சில்லறை விற்பனை அமைப்பான (Retailers Association of India (RAI)) நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொரோனா முதல் அலையின் போது நாட்டில் சில்லறை விற்பனை 49% குறைந்து காணப்பட்டது. தற்போது இரண்டாம் கொரோனா அலையில் சில்லறை விற்பனை 79% குறைந்த கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் சில்லறை விற்பனை 83 % குறைந்துள்ளது. கிழக்கு மாநிலங்களில் 75% தெற்கு மாநிலங்களில் 73 % சில்லறை விற்பனை குறைந்துள்ளதாக இந்திய சில்லறை விற்பனை அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.