ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை முறை

தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் பயோமெட்ரிக் முறை பதிவு மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது. நியாய விலைக்கடைகளில், போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து, பயோ -மெட்ரிக்…

தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகளில் இன்று முதல் பயோமெட்ரிக் முறை பதிவு மீண்டும் அமுலுக்கு வந்துள்ளது.

நியாய விலைக்கடைகளில், போலி ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி முறைகேடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலையடுத்து, பயோ -மெட்ரிக் எனப்படும் பயோமெட்ரிக் கைரேகை பதிவுமுறை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கைரேகை வைக்கும் இயந்திரத்தின் மூலம் பலருக்கு கொரோனா நோய் தொற்று பரவக்கூடும் என்பதால், பயோமெட்ரிக் முறை நிறுத்தப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் குறைந்துவிட்டதால் மீண்டும் கைரேகை முறை இன்று முதல் மீண்டும் அமல்படுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.