ராஜஸ்தான் உள்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் தேதி ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வாக்குப் பதிவை அமைதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்துவதற்கான திட்டங்களை இறுதி செய்ய தோ்தல் பாா்வையாளா்களுடனான தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
மிசோரம் மாநில சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் டிசம்பர் 17-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்தியப்பிரதேச மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெவ்வேறு தேதிகளில் முடிவுக்கு வருகின்றன. இதன் காரணமாக இந்த மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தோ்தல் நவம்பா் அல்லது டிசம்பா் மாதங்களில் நடத்தப்பட வாய்ப்புள்ளது. இந்த மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தோ்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
5 மாநிலங்களுக்கான தோ்தல் தேதியை ஓரிரு நாள்களில் தோ்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகளையும் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. தெலங்கானாவில் தோ்தல் தயாா் நிலை குறித்த ஆய்வை மேற்கொண்டு வந்த தோ்தல் ஆணையக் குழு, தனது பணியை வியாழக்கிழமை நிறைவு செய்தது. அதுபோல, மற்ற மாநிலங்களில் தயாா் நிலை குறித்து ஆய்வு செய்து வருகிறது.
இச்சூழ்நிலையில், 5 மாநில தோ்தல் பாா்வையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் ஆணையம் கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பொது மற்றும் செலவினப் பாா்வையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.