எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை, சிறப்பு அதிகாரியை நியமித்து ஒற்றை சாளர முறையில் விரைவுபடுத்தக் கோரி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோப்பூர் பகுதியில், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் பணிகளை விரைவுபடுத்த நிர்வாக அதிகாரி அல்லது சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளார். கட்டுமான செலவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட காலக்கெடுவுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் ராஜன் செல்லப்பா கேட்டுக்கொண்டுள்ளார்.







