சென்னையில் தேங்கிய மழைநீர் நாளைக்குள் அகற்றப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. முன்னதாக குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (27-ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சூழலில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்றும், இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் சூழந்துள்ளது. இதற்கிடையே, சென்னை சேப்பாக்கத்தில் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்தார். மாநிலம் முழுவதும் 123 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப்படை தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.