கதிரியக்க சாதனங்கள் கடத்தப்படுவதை தடுக்க பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட எல்லைகளின் 8 இடங்களில், விரைவில் கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளை பொருத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது, “அணுக் கருவிகள் அல்லது கதிர்வீச்சை பரப்பும் கருவிகளைத் தயாரிக்க கதிரியக்க சாதனங்களைப் பயன்படுத்தலாம். அந்த சாதனங்கள் இந்தியாவுக்குக் கடத்தப்படுவது நாட்டின் பாதுகாப்புக்கு சவாலை ஏற்படுத்தக் கூடும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எனவே, அந்த சாதனங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க பாகிஸ்தான் எல்லையையொட்டி உள்ள அட்டாரி, வங்கதேச எல்லையையொட்டி உள்ள பெட்ராபோல், அகர்தலா, டாவ்கி, சுதார்கான்டி, நேபாள எல்லையையொட்டி உள்ள ரக்செளல் மற்றும் ஜோக்பனி, மியான்மர் எல்லையையொட்டி உள்ள மோரே ஆகிய 8 இடங்களில், விரைவில் கதிா்வீச்சு கண்டறியும் கருவிகள் பொருத்தப்பட உள்ளன” என்று தெரிவித்தன.
இந்த 8 இடங்களில் எல்லை தாண்டி பொதுமக்கள் பயணிப்பதும், சரக்குப் போக்குவரத்தும் சற்று அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.