கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் லியோனல் மெஸ்சி, நடப்பாண்டு
கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை தொடர் தான், கடைசி தொடராக இருக்க கூடும் என தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, தனது 17 ஆண்டு கால கால்பந்து பயணத்தை நடப்பாண்டு கத்தாரில் நடைபெறவுள்ள உலக கோப்பை தொடருடன் முடியப்போவதாக பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வந்த லியோனல் மெஸ்ஸி, இந்த வருடம் பிரஞ்சு கிளப் அணிக்காகவும், அவரது நாடான அர்ஜென்டினா நாட்டிற்காக 4 உலக கோப்பை போட்டிகளில் பங்கு பெற்றவர். அர்ஜென்டினா நாட்டிற்காக 164 போட்டிகளில் களம் கண்டுள்ள மெஸ்ஸி, இதுவரை 90 கோல்கள் அடித்துள்ளார். அர்ஜென்டினா நாட்டிற்காக அவர் புரிந்த சாதனைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுவது, கேப்டனாக 35 போட்டிகளில் தொடர் வெற்றி கண்டுள்ளார்.
இந்நிலையில் தனியார் பத்திரிக்கை நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், உலக கோப்பைக்கான நாட்களை நான் எண்ணிக் கொண்டிருக்கிறேன், உண்மை என்னவென்றால் என்னுள் சிறு பதட்டம் உள்ளது. என்னுடைய கடைசி போட்டியை என்னால் எப்படி ஏற்றுக்கொள்வது என எனக்கு தெரியவில்லை, அதுவரை என்னால் காத்திருக்க முடியாது. ஆனால் அது நன்றாக நடக்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா அணி குறித்து பேசிய மெஸ்ஸி, அர்ஜென்டினாவை பொறுத்தவரை நாங்கள் உங்களின் பிடித்தமானவர்களா என்று தெரியவில்லை. ஆனால் அர்ஜென்டினா வரலாற்று சிறப்புமிக்க அணிகளில் ஒன்றாக இருந்துள்ளது. நாங்கள் பலருக்கும் பிடித்தமானவர்கள் அல்ல. எங்களுக்கும் மேலே மற்ற அணிகள் உள்ளதாக நான் நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
நடப்பாண்டு கத்தாரில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து தொடர் தனது இறுதி தொடராக இருக்க கூடும் என மெஸ்ஸி அறிவித்துள்ள நிலையில், இந்த வருடம் மிகவும்
சுவாரஸ்யமான தொடராக இது அமையக்கூடும். அதேசமயம் மெஸ்ஸி கிளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக எந்த கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை. கிளப் போட்டிகளில் அவர் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.