சென்னை திருவல்லிக்கேணியில் முதியவர் மீது மாடு முட்டிய
சம்பவத்தை தொடர்ந்து ஐஸ்ஹவுஸ் பகுதியில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரிந்து கொண்டிருந்த மாடுகளின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 80). வாய் பேச முடியாத இவர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று திடீரென சுந்தரத்தை கொம்பால் முட்டி தூக்கி வீசியது. இதில், நிலைகுலைந்த அவர் சாலையில் விழுந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஐஸ்ஹவுஸ் பகுதியில் சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 18 மாட்டின் உரிமையாளர்கள் மீது ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் ஆஷா லதா அளித்த புகாரின் பேரில் , ஐஸ் வுஸ் போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கால்நடைகளை அலையவிட்டதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஐஸ்ஹவுஸ் பகுதியில் உரிமையாளர் இல்லாமல் சுற்றி திரிந்ததாக 30 மாடுகளை பறிமுதல் செய்துள்ளனர். ஏற்கனவே மாடு முட்டிய வழக்கில் அடையாளம் தெரியாத நபர் மீது ஐஸ்ஹவுஸ் போலீசார் இரு பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.