இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு மீனவர்கள் கண்டனம்!

இலங்கையில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக பழைய ரயில் பெட்டிகளை கடலில் இறக்கப்போவதாக கூறிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இலங்கையின் கடல் வளங்களை பாதுகாப்பதற்கும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காவும் கடந்த சில நாட்களுக்கு…

இலங்கையில் மீன்கள் இனப்பெருக்கத்திற்காக பழைய ரயில் பெட்டிகளை கடலில் இறக்கப்போவதாக கூறிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் கடல் வளங்களை பாதுகாப்பதற்கும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டு கடற்படை கப்பல் மூலம் 20க்கும் மேற்பட்ட பழைய பேருந்துகளை கடலில் இறக்கினர்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு மீனவர்கள், ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இந்த நிலையில் இலங்கையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பழைய ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க உள்ளதாக கூறியுள்ளார்.

இலங்கை அரசின் இந்த அறிவிப்பை வாபஸ்பெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது தவறும் பட்சத்தில் ஒட்டுமொத்த மீனவர்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.