முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

மீண்டும் தமிழ்நாடு வருகிறாரா பிரதமர் மோடி?

மக்களவைத் தேர்தல் நிறைவடைய உள்ள நிலையில், மே 30,31, ஜூ1 ஆகிய 3 நாட்களில்   பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெறுகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில், பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள் : I.N.D.I.A. கூட்டணியின் பிரதமர் யார்? – ஜூன் 1ம் தேதி ஆலோசனை கூட்டம்!

மக்களவைத் தேர்தல் குறித்த தகவல் வெளியானது முதல் ஏப்ரல் மாதம் வரை ஏழுக்கு மேற்பட்ட முறை தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும், மே 30,31, ஜூ1 ஆகிய 3 நாட்களில் கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவின் போது பிரதமர் மோடி இமயமலைக்கு சென்று தியானம் செய்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி – இந்தியா வெண்கல பதக்கத்துடன் வெளியேறியது!

Web Editor

ஒப்பில்லா 9ம் ஆண்டில் நியூஸ் 7 தமிழ்: ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் வாழ்த்து

G SaravanaKumar

ஜிஎஸ்டி உயர்வு: ”மாநில அரசுகளிடம் கருத்து கேட்கவில்லை”

Janani

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading