மதச்சார்பற்ற ஜனநாயகவாதியை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் நடைபெற்ற திருமண விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா கலந்துகொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜா, “அரசியல் பெரும் சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. பாஜக – ஆர்எஸ்எஸ் கூட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை திருத்த முயல்கிறது. ஜனநாயகத்திற்கு எதிராக செயல்படுகிறது. சாதிய, மத மோதல்களை தூண்டி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்திய பொருளாதாரம் நிலைகுலைந்து போயிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில், மதச்சார்பற்ற ஜனநாயகவாதியை தேர்ந்தெடுக்க வேண்டும். ஜனநாயகத்தை, அரசியலமைப்பை, மதச்சார்பற்ற தன்மையை கொண்ட வேட்பாளரை முன்னிறுத்த, அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பாஜக தவிர்த்த தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஒன்றினையும் போது, பாஜக ஒன்றும் பெரிய கட்சி அல்ல என்றும் கூறினார்.
மேலும், “சாதியின் பேரால் ஒடுக்குமுறை இருக்கக்கூடாது – சமூக நீதி,பொருளாதார நீதி, ஏழை – எளிய மக்களுக்கும் சிறுபான்மையின மக்களுக்கும் கிடைக்க வேண்டும். சாதி, மதங்கள் கடந்து புதிய சமுதாயம் அமைய வேண்டும் என்று கொள்கை ரீதியாக போராடுவதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நோக்கம்” என்றும் கூறினார்.