குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், எலக்டோரல் காலேஜ் என்றால் என்ன? அதன் மதிப்பு எவ்வாறு கணக்கிடப்படுகிறது? வாருங்கள் பார்ப்போம்.
குடியரசுத் தலைவர் தேர்தல் பொதுமக்களுக்கானது அல்ல. இதில் வாக்களிக்க இருப்பவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களே. இந்த வாக்காளர்களின் தொகுப்பே எலக்டோரல் காலேஜ் எனப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான வாக்கு மதிப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடுகிறது. காரணம் ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இதற்கான மதிப்பு கணக்கிடப்படுகிறது. 1971ம் ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பே, மாநிலங்களின் மக்கள் தொகைக்கு இன்றளவும் ஆதாரமாகக் கொள்ளப்படுகிறது.
உதாரணத்திற்கு, 1971ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 4 கோடியே 11 லட்சத்து 99 ஆயிரத்து 168. இந்த அடிப்படையில் தமிழ்நாட்டு எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்குமான மதிப்பு 176 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள 234 எம்எல்ஏ-க்களின் மொத்த மதிப்பு ( 176X234=41,184) 41 ஆயிரத்து 184.
இந்தியாவில் அதிக மதிப்பு கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் உள்ளது; குறைந்த மதிப்பு கொண்ட மாநிலமாக சிக்கிம் உள்ளது. உத்தரப்பிரதேச எம்எல்ஏ-க்கள் ஒவ்வொருவருக்குமான மதிப்பு 208; சிக்கிம் எம்எல்ஏ-க்கள் ஒவ்வொருவருக்குமான மதிப்பு 7.
- நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்.
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4,120. இந்த மொத்த எம்எல்ஏக்களுக்குமான மதிப்பு 5 லட்சத்து 49 ஆயிரத்து 495. இந்த மொத்த மதிப்பை, நாட்டில் உள்ள அனைத்து எம்பிக்களின் எண்ணிக்கையான 776ஐக் கொண்டு வகுப்பதன் மூலம் கிடைக்கும் எண்ணான 708தான், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கு மதிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கு எம்பிக்களைப் பொறுத்தவரை அவர்கள் எந்த மாநிலத்தவர்களாக இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் ஒரே வாக்கு மதிப்புதான்.
அனைத்து எம்எல்ஏ-க்கள் மற்றும் எம்பிக்களின் மொத்த மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903.
இந்த வாக்கு மதிப்பில் யார் அதிக மதிப்பை பெறுகிறார் என்பதைப் பொறுத்தே வெற்றியாளர் அறிவிக்கப்படுகிறார்.
- சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.