தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு!

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5…

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இன்று 1 மணி நிலவரப்படி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக சார்பில் பாமக வேட்பாளர் ஜே. கார்த்திகேயன் இத்தொகுதியில் போட்டியிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.