இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் ஒவ்வொருவரையும் நான் இந்தியாவின் தூதர் என்று அழைக்கிறேன் என்று வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17-வது வெளிநாடு வாழ் இந்திய தின விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கிவைத்தார். இந்த மாநாடு மூன்று நாட்கள் நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து 3500 வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பிரதமர் மோடியுடன் மத்திய பிரதேச மாநில முதல் சிவராஜ் சிங் செளகான், மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, “இந்த உலகமே ஒரே நாடுதான். அனைத்து மக்களும் நம் சகோதரர்கள்தான். இது நம் முன்னோர்களால் கலாச்சார ரீதியில் வடிவமைக்கப்பட்டது. நாட்டு மக்கள் சார்பாக உங்களை வரவேற்கிறேன். இந்த மாநாடு நாட்டின் இதயம் என்று அழைக்கப்படும் நிலத்தில் நடைபெறுகிறது.
ஒவ்வொரு வெளிநாடு வாழ் இந்தியரும் இந்தியாவின் தூதர் என்றே அழைப்பேன். இந்தியாவின் தூதராக உங்கள் மாறுபட்டது. நீங்கள் மேக் இன் இந்தியாவின் தூதர்கள். இந்தியாவின் குறு,சிறூ தொழிகள், கைவினை பொருட்கள் ஆகியவற்றின் தூதர்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பை ஆராய்ந்தால் இந்தியா எவ்வளவு வலிமையான மற்றும் திறமையான நாடு என்பது புரியும். இந்தியா வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் முன்னணியில் உள்ளது. இந்தியா உலகின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.