10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 94.31% மாணவர்கள் தேர்ச்சி!

2025-26ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டில் 2025-26ம் கல்வியாண்டுக்கான 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.31 சதவீத மாணவ-மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் பேர் எழுதிய நிலையில் 8,21,105 (94.31 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, 92.15 சதவீதம் மாணவர்களும் 96.47 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 4.32 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை http://www.tnresults.nic.in, http://www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:

98.43%
ஆங்கிலம் 99.44%
கணிதம் 97.36%
அறிவியல் 98%
சமூக அறிவியல் 97.93%

புதுக்கோட்டை முதலிடமும், சிவகங்கை 2 ஆம் இடம், தஞ்சாவூர் 3 ஆம் இடம், திருச்சி 4ஆம் இடம், கன்னியாகுமரி 5 ஆம் இடம் பிடித்துள்ளது. இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித் தேர்வர்கள் தாங்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக தேர்வு முடிவுகள அனுப்பப்படும்..

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.