32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

திருமண அழைப்பிதழில் செல்லப் பிராணிகளின் பெயர்கள்-அன்பை வெளிப்படுத்திய குடும்பம்

தான் வளர்க்கும்  நாய்களின் பெயரை தனது மகனின் திருமண பத்திரிக்கையில் போட்டு தனது பாசத்தை வெளிப்படுத்திய கோவையை சேர்ந்த ஒரு குடும்பம்.

கோவை பன்னிமடை பகுதியில் வசிப்பவர்கள் மோகன் ,ஷோபா தம்பதியினர் .இவர்கள் கொரோனா காலக்கட்டத்தில் சாலையோரம்  சுற்றிவரும் 100 க்கு மேற்பட்ட நாய்களுக்கு தினமும் உணவு வழங்க துவங்கியுள்ளனர். நாட்கள் கடந்த நிலையில்  அந்த நாய்கள் இவர்கள் மீது காட்டும் அன்பை பார்த்து, அதன் மீது அதிக  பாசம் கொண்டு தினமும் அந்த நாய்களுக்கு அந்த குடும்பத்தினர் மற்றும் அவரது ஒரே மகன் மணிகண்டன் ஆகியோர் பணிக்கு செல்லும் போது தினமும் தெரு நாய்களுக்கு உணவு வழங்க துவங்கியுள்ளனர். மோகன்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஒரு நாள் பணிக்கு செல்லும் நேரத்தில், சாலை விபத்தில் அடிப்பட்டு கிடைந்த ஒரு குட்டி நாயை தூக்கி வந்து வளர்த்துள்ளனர். அந்த நாய் ,ஒரு நாள் மூன்று குட்டிகளை ஈன்று இறந்து விட்டது. அதன் மீது உள்ள பாசத்தால் அந்த மூன்று குட்டிகளுக்கு buffy, tingu, Lucy என பெயர் வைத்து தனது பெற்ற குழந்தைகள் போல வளர்க்க துவங்கினர். தனது மகனுக்கு ஒரு சகோதர ,சகோதரிகள் இருந்தால் எப்படி வளர்ப்பார்களோ அப்படி வளர்த்து வருகின்றனர். இறந்த நாயின் வலி தெரியாமல் இருக்க இந்த மூன்று நாய்களையும் வளர்ப்பதாக கண்ணீர் வடித்து கூறினார் மோகன்.  அதன் மீது வைத்துள்ள பாசத்தின் வெளிப்பாடகவே எனது மகனின் திருமண பத்திரிக்கையில் அந்த மூன்று நாய்களின் பெயரை குறிப்பிட்டதாக கூறினர்.

ஷோபா

இந்த திருமண பத்திரிக்கையில் நாயின் பெயரைக் குறிப்பிட்டதால் உறவினர்கள் மற்றும்
நண்பர்கள் அனைவருக்கும் வழங்கும் போது யார் இவர்கள் என்றும் ,உங்களுக்கு ஒரே
மகன் தான் இருக்கிறார்கள் என்று பலரும் கேட்டதாக கூறினர் . யாரையும் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை இவர்களும் என் குழந்தைகள் தான் , எனவும் திருமண மேடையில் இந்த நாய்களுடன் குடும்பத்தோடு புகைப்படம் எடுக்க ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மணமகன் – மணிகண்டன்

இதேபோல்  மணிகண்டன் கூறுகையில்,எனக்கு தங்கை ,தம்பிகள் இருந்தால் எப்படி பழகுவனோ அதேபோல் தான் அதனுடன் ஒரே அறையில் தூங்குவதும் ,சாப்பிடுவதுமாக இருப்பதாகவும் தெரிவித்தார். பத்திரிக்கையில் கூட நாய்களின் பெயர் போட்டதற்கு ஆரம்பத்தில் மணமகள் வீட்டிலிருந்து கேட்டதாகவும் பின்னர் அவர்களும் எங்களின் பாசத்தைக் புரிந்து கொண்டாதகவும் அவர் தெரிவித்தார்.
இல்ல திருமண பத்திரிக்கையில் வளர்க்கும் மூன்று  நாய்க்களின் பெயர்களை போட்டு தனது பாசத்தைக் வெளிபடுத்தியுள்ள இந்த குடும்பத்தினரின் செயலை அனைவரும் வியந்து பாராட்டி  வருகின்றனர்…

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading