பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவது வீர விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கலின் முதல் நாளான நேற்று உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமர்சையக நடந்து முடிந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை முதல் விருவிருப்பாக நடைபெற்று வருகின்றது. நண்பகல் வரை 5 சுற்று முடிவடைந்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
போட்டிகள் விருவிருப்பாக நடந்து கொண்டிருக்கும்போது போட்டியில் சிலர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட 16 பேர் போட்டியின் நடுவர்கள் குழு மூலமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போட்டியின்போது ஜல்லிகட்டு வீரர்கள் பனியன்களை மாற்றிக் கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது. போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வீரருக்கும் ஒரு எண் கொண்ட பனியன் வழங்கப்படும். இதனிடையே வீரர்கள் பனியன்களை மாற்றிக் கொண்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியில் இன்று மட்டும் மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூரில் காளைகள் முட்டியதில் பலத்த காயங்களோடு இருவர் பரிதாபமாக உயிரழந்தனர்.