இந்திய இளைஞர்கள் நமது நாட்டை உலகத்தோடு இணைக்கிறார்கள் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் 17வது கூட்டம் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெற்றது. 1915ம் ஆண்டு மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து மும்பை திரும்பிய நிகழ்வை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த மாநாடு மத்திய அரசின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
கொரொனா ஊரடங்கு காரணமாக 2019 முதல் இணைய வழியில் நடைபெற்ற இந்த மாநாடு முதல் முறையாக இந்த ஆண்டு தான் பொது அரங்கில் நடத்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய எம்பி சனெட்டா மஸ்கரென்ஹாஸ், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிகழ்வில் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது
“தொழில் நுட்பமாக இருந்தாலும் , இந்தியாவை உலகத்தோடு இணைப்பதிலும் இந்திய இளைஞர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். இந்த நிகழ்வின் நோக்கம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நமது தார்மீக ஆதரவை வழங்குவதுதான். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நமது நாட்டு இளைஞர்கள் நமது நாட்டை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வார்கள் “ என புகழாரம் சூட்டியுள்ளார்.