“ஒரே நாடு, ஒரே தேர்தல்” ஒற்றுமையை சீர்குலைக்கும்: திருமாவளவன்

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைபட்டியில் தீயாகசீலர் கக்கனின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை…

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒற்றுமையை சீர்குலைக்கும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தும்பைபட்டியில் தீயாகசீலர் கக்கனின் 114வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கக்கன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அக்னிபாத் திட்டத்திற்கு
கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், 10 கோடி பேருக்கு வேலை வழங்குவேன் என
கூறிய ஒன்றிய அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிப்பதாகவும், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்களின் வீடு சேதப்படுத்தப்படுவதை கண்டித்து வரும் 22ஆம் தேதி தனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒற்றுமையை சீர்குலைக்கும். நாட்டின் பன்முகத் தன்மைக்கு இது எதிரானது என்றார்.

ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.