நாளை திருவோணம் கொண்டாடப்படும் நிலையில் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் மல்லிகைப்பூ 1 கிலோ 4500 ரூபாய்க்கும், பிச்சிப்பூ 2500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்களின் விற்பனை அதிகரித்து உள்ளதால் 500 டன் பூக்கள் இறக்குமதியாகி உள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கேரள மக்களின் வசந்த விழாவான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்காக அத்திப்பூ கோலங்கள் மற்றும் பல்வேறு உபயோகங்களுக்காக ஏராளமான பூக்கள் பயன்படுத்துவது வழக்கம். குறிப்பாக, கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொல்லம் போன்ற பகுதிகளுக்கு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் இருந்து காலம் காலமாக பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது. கொரோனா தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகள் பிறகு தற்போது, தடையில்லா ஓணம் கொண்டாடப்படுவதால் பூக்களின் விலை உச்சம் தொட்டுள்ளது.
கடந்த வாரம் 450 ரூபாய்க்கு விற்ற ஒரு கிலோ மல்லிகை பூ இன்று 4500 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்ற பிச்சிப்பூ இன்று 2500 ரூபாய்க்கும், 70 ரூபாய்க்கு விற்ற கிரேந்தி 150 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி 250 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்ற அரளிப்பூ 600 ரூபாய்க்கும், 150 ரூபாய்க்கு விற்ற செவ்வந்திப்பூ 400 ரூபாய்க்கும் 50 ரூபாய்க்கு விற்ற ரோஸ் 200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதிக அளவில் பூக்கள் விற்பனையானதால் தோவாளை பூ மார்க்கெட் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தள்ளனர்.