’STR-க்கு சகோதரியாக நடிக்க ஒரு நடிகை கூட தயாராக இல்லை’ என ‘பத்து தல’ திரைப்பட இயக்குநர் கிருஷ்ணா கூறினார்.
பத்து தல படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா பத்து தல படத்தை இயக்கியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிவடைந்து வரும் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் படக்குழு புரொமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பத்து தல திரைப்படம் தற்போது சென்சார் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் அதிக சண்டைக் காட்சிகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 32 நிமிடம் எனவும் தகவல் வந்துள்ளதாகவும், சென்சார் காப்பியில் இந்தப் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர், முதல் பாதியை விடவும் இரண்டாம் பாதி தாறுமாறாக இருப்பதாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற பாசிட்டிவான ரிப்போர்ட்ஸ் வருவதால் சிம்பு ரசிகர்கள் இப்படமும் ஹிட் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருப்பதோடு படத்தின் வெற்றியை இப்போதே கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் பத்து தல ப்ரோமோஷன் பணிகள் தீவிரம் எடுத்து வருகிறது. ‘பத்து தல’ திரைப்படம் வரும் 30-ம் தேதி திரைக்கு வருகிறது. அதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னை வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்றது.
அப்போது இயக்குநர் கிருஷ்ணா மேடையில் பேசுகையில், ‘ STR மாதிரி ஒரு மாஸ் ஹீரோ வைத்து படம் எடுப்பதில் ஒரு சேலஞ்ச் இருக்கிறது. இதில் அவர் ஏ.ஜி.ஆர். ஆகவே வாழ்ந்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மிகச்சரியாக இருந்தார்.
கவுதம் கார்த்திக்கை மிகவும் கொடுமைப்படுத்தி விட்டேன். இதில் புது கவுதம் கார்த்திக்கைப் பார்ப்பீர்கள். கவுதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தில் மிகச்சரியான வில்லனாக நடித்துள்ளார். அவருக்கு மனமார்ந்த நன்றிகள். STR-க்கு சகோதரியாக நடிக்க ஒரு நடிகை கூட தயாராக இல்லை. தென்னிந்தியாவில் அவருக்குச் சகோதரியாக நடிக்க ஒப்புக்கொண்ட ஒரே நடிகை அனுசித்தாரா மட்டும் தான்.
ராவடி பாடல் நன்றாக வந்ததற்குக் காரணம் சாயிஷா தான். ரகுமான் சாரின் BGM இன்னொரு மைல்ஸ்டோனாக கண்டிப்பாக இருக்கும். ஏ.ஆர்.அமீன் படத்தில் பாடுவது முதல்முறை. படத்துக்கு உங்கள் ஆதரவு வேண்டும் நன்றி என இயக்குநர் கிருஷ்ணா மேடையில் பேசினார்.