கொலை வழக்கில் பிரபல இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார், சாகர் ராணா இருவரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்ட நிலையில், 23 வயதான சாகரை கடத்திச்சென்று சுஷில் குமாரும் அவர் நண்பர்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. சத்ராஸல் அரங்கில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார் சாகர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து அவருடைய மற்றொரு நண்பர், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சாகர் உயிரிழந்தார். இதையடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார், சுஷில்குமார் உள்ளிட்டோரை தேடி வந்தனர்.
இந்நிலையில் சுஷில் குமார் தலைமறைவானார். அவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதனால், சுஷில் குமார் நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல முடியாத வகையில், அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.