பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அரசு நியாய விலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய், சிறு தானியங்கள், செக்கு எண்ணெய், நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் ஆகியவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
தேர்தலின் போது இப்படியொரு வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு, பொங்கல் பண்டிகையின் போது வெளிமாநிலங்களில் இருந்து வெல்லத்தை வரவழைத்து கொடுத்ததையும், அதுவும் கெட்டுப்போனதாகப் புகார்கள் பல எழுந்ததையும் தமிழக மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். விவசாயிகளை நம்பவைத்து ஏமாற்றிய உங்கள் கட்சியை எவரும் மன்னிக்கவும் மாட்டார்கள்.
போன தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளிலேயே நிறைவேற்றாத வாக்குறுதிகள் வரிசை கட்டி நிற்கையில், வரவிருக்கும் தேர்தலுக்கான அறிக்கையைத் தயாரிக்க ஒரு குழுவை நியமித்துள்ளது உங்கள் அறியாமையின் உச்சம். தமிழக மக்களை அத்தனை எளிதாக மீண்டும் ஏமாற்றிவிடலாம் என்ற உங்கள் பகல் கனவு இனி ஒருநாளும் பலிக்காது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







