முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

இஸ்லாமியர்கள்- திமுக இடையிலான நட்பை யாராலும் பிரிக்க முடியாது- முதலமைச்சர்

இஸ்லாமியர்களுக்கும், திமுகவிற்கும் இடையிலான நட்பை யாராலும் பிரிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-கின் பவள விழா கடந்த இரண்டு நாட்களாக கோலகலமாக கொண்டாடப்பட்டது. இறுதி நாள் நிகழ்வாக, சென்னை கொட்டிவாக்கத்தில் பிரமாண்ட மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளிம்பு நிலை மக்களுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களுக்கும் திமுகவிற்கும் இடையிலான நட்பை யாராலும் பிரிக்க முடியாது. இஸ்லாமியர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியவர் கருணாநிதி என்று கூறினார்.தொடர்ந்து பேசிய அவர், இஸ்லாமியர்கள் வேறு. தாம் வேறு என கருணாநிதி நினைத்ததில்லை. இஸ்லாமியர்கள் நலனுக்காக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். ஒரே நாடு, ஒரே பண்பாடு, ஒரே மொழி இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஃபெடரல் விளைவு என்றால் என்ன?

G SaravanaKumar

உள்ளாட்சித் தேர்தல்; மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அலோசனை கூட்டம்

G SaravanaKumar

கொரோனா விழிப்புணர்வு: மூக்கு வழியாக 100 பலூன்களை ஊதி சாதனை!

Dhamotharan