எவ்வளவு மழை வந்தாலும் இந்த அரசு மக்களை பாதுகாக்கும் -அமைச்சர் எ.வ.வேலு

எவ்வளவு மழை வந்தாலும் மக்களை பாதுகாக்கிற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார். சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்…

எவ்வளவு மழை வந்தாலும் மக்களை பாதுகாக்கிற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

சென்னை புறநகர் பகுதிகளான பள்ளிக்கரணை பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர்
வடிகால் வாய் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மருத்துவர்
மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் நேரில்
சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதை தொடர்ந்து துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் நடைபெற்று வரும் அகல
மூடு கால்வாய்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அதிகாரிகள்
வரைபடம் மூலம் மழைநீர் வடிகால்வய் அமைக்கும் வழித்தடங்களை அமைச்சர்களிடம்
காண்பித்தனர். இந்த ஆய்வில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்
ரமேஷ் மண்டல குழு தலைவர்கள் ரவிச்சந்திரன், மதியழகன் ஆகிய கலந்து கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ஒன்றரை
ஆண்டுக்கால ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றி வருவதால் மக்கள் முதலமைச்சரை பாராட்டி  வருகின்றனர். 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைக்கக்கூடிய ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம்.

பள்ளிக்கரணை ஏரியிலிருந்து சதுப்புநிலத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில்
ரூபாய் 18 கோடி மதிப்பீட்டில் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், அதேபோல்
நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணைக்கு 800 மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 18
கோடி மதிப்பீட்டில் பணிகள் 60% சதவிகீதம் முடிந்துவிட்டதாக கூறினார்.

கடந்த ஆண்டு காலத்தில் தண்ணீரில் தெருக்கள் மூழ்கிய நிலையில் இந்த முறை
அதுபோன்ற பாதிப்பு இல்லை. காரணம் சதுப்புலம் முதல் பக்கீங்காம் கால்வாய் 70
கோடி மதிப்பீட்டில் சுமார் 2.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் நடைபெற்று
வருவதால் இந்த பணிகள் முழுமையடைந்த நிலையில் எவ்வளவு மழை வந்தாலும் மக்களை பாதுகாக்கிறது அரசாக இந்த அரசு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை கூட ஓய்வில்லாமல் முதல்வர் உழைத்து வருவதால்தான் சென்னை மாநகராட்சியில் மழையால் பாதிப்பு இல்லை என்ற நிலை உருவாகியிருக்கிறது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.