பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு, தான் அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்களுக்கு பின் எந்த நலத்திட்டமும் வரவில்லை என்று முன்னாள் அமைச்சரும் அமமுக வேட்பாளருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட தென்கரைக்கோட்டை, கோபிசெட்டிபாளையம், கருத்தானூர், தாதனூர், உள்ளிட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் பரப்புரை மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தென்கரை கோட்டை பகுதியில் பழனியப்பன் பேசியதாவது, தான் அமைச்சராக இருந்த காலத்தில், இந்த பகுதிக்கு கொண்டு வந்த திட்டங்களுக்கு பிறகு வேறு எந்த நல்ல திட்டமும் தொகுதிக்கு வரவில்லை எனவும் தன்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் எனவும் அவர் என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.