தமிழ்நாட்டில் எந்த பேருந்தும் நிறுத்தப்படவில்லை! – இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்

அரசு பேருந்துகள் எதுவும் நிறுத்தப்படவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார். மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து உள்ளதாக…

அரசு பேருந்துகள் எதுவும் நிறுத்தப்படவில்லை என்றும், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு பொய்யானது எனவும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் விளக்கமளித்துள்ளார்.

மகளிருக்கு இலவச பயணம் என அறிவித்து விட்டு அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்து உள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சி அமைந்தபின் தமிழ்நாட்டில் எந்த அரசு பேருந்தும் நிறுத்தப்படவில்லை என்று கூறியுள்ளார். கட்டணமில்லா பயண திட்டத்தில் இதுவரை 277 கோடியே 13 லட்சம் பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர் என்றும், இந்த திட்டம் பெண்களிடம் பெரும் ஆதரவை முதலமைச்சருக்கு பெற்றுத் தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : காயத்தால் விலகிய ராகுல் – மாற்று வீரரை அறிவித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு கூட புதிதாக ஆட்கள் எடுக்கப்படவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற தவறை மறைக்க, எடப்பாடி பழனிசாமி தவறான அறிக்கையை வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சர் சிவசங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.