காயத்தால் விலகிய ராகுல் – மாற்று வீரரை அறிவித்தது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகிய நிலையில், அவருக்கு பதில் கருண் நாயரை களமிறக்க லக்னோ அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர்…

காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகிய நிலையில், அவருக்கு பதில் கருண் நாயரை களமிறக்க லக்னோ அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக இருப்பவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர், பெங்களூர் அணிக்கு எதிராக மே 1-ஆம் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் காயம் அடைந்தார். ஃபீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.

இதனால் மே 3-ஆம் தேதி நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் கே.எல்.ராகுல் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக க்ருணால் பாண்டியா லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட்டார். இதனையடுத்து கே.எல்.ராகுல் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள் : ராஜஸ்தானை பந்தாடியது குஜராத் – 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் தீவிரம் அடைந்திருப்பதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும், அடுத்த மாதம் லண்டனில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இருந்தும் கே.எல்.ராகுல் விலகியுள்ளார்.

இந்நிலையில், கே.எல்.ராகுலுக்கு பதிலாக கருண் நாயரை களமிறக்க லக்னோ அணி முடிவு செய்துள்ளது. கருண் நாயர் இதுவரை 70-க்கும் மேற்பட்ட ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.