நீலகிரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டம்

பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் உள்ள அரசு தோட்டக் கலைத் துறை மற்றும் பூங்காக்களில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் உள்ள அரசு தோட்டக் கலைத் துறை மற்றும் பூங்காக்களில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள மலைவாழ் சுற்றுலாத் தலங்களில் முக்கியமான ஒன்று நீலகிரி.இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.மக்கள் பார்த்து ரசிப்பதற்கு ஏதுவாக அரசின் சார்பில் தாவரவியல் பூங்கா,ரோஜா பூங்கா,காட்டேரி பூங்கா உள்ளிட்ட ஏராளமான இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றை பராமரிப்பதற்கு தற்காலிகமாக சுமார் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் அரசுக்கு சொந்தமான பண்ணைகளில் 200 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.மொத்தமாக 500 க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் 400 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இவர்கள் தங்களை 480 நாட்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிபவர்களை தகுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யக்கோரியும்,
அரசாணையில் அறிவித்தப்படி நாள் ஒன்றுக்கு குறைந்தப்பட்சம் ஊதியம் 700 வழங்க வேண்டும்,சிறப்பு காலவரை தொகுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி 500 க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் தோட்டக்கலைத் துறை மற்றும் தாவரவியல் பூங்காவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.