தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரும் என்ஐஏ இன்று (ஜூன் 30) காலை முதல் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, தஞ்சாவூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு பகுதியில் ஜேசிஸ் பள்ளி அருகில் அசோக் நகர் 6வது வீதியில் உள்ள குடியிருப்பில் சர்புதீன் என்பவர் வீட்டில் திருப்பூரில் இருந்து வந்த ஐந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், பெரியார் நகரில் உள்ள முகமது இசாக் என்பவரின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடக்கிறது. அதிகாரிகளின் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு பிறகே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.