முக்கியச் செய்திகள்தமிழகம்

சென்னை உள்பட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் தொடர்ந்து கண்காணித்து வரும் என்ஐஏ இன்று (ஜூன் 30) காலை முதல் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஹிஜ்புத் தகர் என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, தஞ்சாவூர், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு பகுதியில் ஜேசிஸ் பள்ளி அருகில் அசோக் நகர் 6வது வீதியில் உள்ள குடியிருப்பில் சர்புதீன் என்பவர் வீட்டில் திருப்பூரில் இருந்து வந்த ஐந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல், பெரியார் நகரில் உள்ள முகமது இசாக் என்பவரின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடக்கிறது. அதிகாரிகளின் திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனைக்கு பிறகே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

சட்டமன்ற உறுப்பினர்களாக 9 பேர் பொறுப்பேற்பு!

Vandhana

சிஎஸ்கே… சிஎஸ்கே…. சிஎஸ்கே…. – கடந்து வந்த பாதை!!

Jeni

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள் – காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை!

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading