திருமங்கலத்தை விஞ்சும் ஈரோடு பார்முலா- ஜெயக்குமார் விமர்சனம்

திருமங்கலம் பார்முலாவை விட ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் புது பார்முலாவை பின்பிற்றுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை அதிமுக சேர்ந்த முன்னாள்…

திருமங்கலம் பார்முலாவை விட ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவினர் புது பார்முலாவை பின்பிற்றுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை அதிமுக சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை உள்ளிட்டோர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புகாரளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஈரோடு கிழக்கில் தினந்தோறும் அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. ஆளுங்கட்சியினர் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை. ஒட்டகத்தில் செல்கிறார்கள், வடை, பஜ்ஜி போண்டா சுடுகிறார்கள். ஒட்டகத்தில் செல்வது தவறு. சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு புகாரளித்துள்ளோம்.

இதையும் படிக்கவும் : இந்திய பாரம்பரிய பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது- பிரதமர் மோடி

வாக்களர்களுக்கு ரூ.500, சிக்கன், மட்டன், கறி அளித்து வருகின்றனர்.வாக்காளர்களின் மனம் ஒரே மனம் தான். ஆட்சி மீதான அதிருப்தியில் இரட்டை இலைக்கு வாக்களித்து ஆளுங்கட்சிக்கு சவுக்கடி கொடுப்பார்கள். முதலமைச்சரின் ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில், பணம் செல்லும் வழியை அடைத்துவிடாதீர்கள். திமுகவினர் பணம் கொண்டு செல்வதை தடுக்காதீர்கள் என அதிகாரிகளிடம் சொல்லப்படுகிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. ஒரே நாளில் 9 கொலை நடந்துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இதுவரை ரூ 35.64 கோடி செலவு செய்துள்ளார். கொள்ளையடித்த பணத்தை வாரி வாரி இறைக்கின்றனர். காவல் துறையினருக்கு, தனி மனிதனுக்கு பாதுகாப்பில்லை என்று ஜெயக்குமார் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.