முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் -அனுஷா டெய்சி எர்னஸ்ட்

தமிழகத்திற்கு இழுக்கு ஏற்படுத்திய நளினி மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் காவல்துறை அதிகாரியும், ராஜீவ்காந்தி படுகொலையின் போது பாதுகாப்புப் பணியிலிருந்த அனுஷா டெய்சி எர்னஸ்ட் தெரிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்” ராஜீவ் காந்தி படுகொலையின் போது நான் பாதுகாப்புப் பணியிலிருந்தேன். அந்த குண்டுவெடிப்பில் நான் பெரிதும் பாதிக்கப்பட்டேன் என் விரல்கள் துண்டிக்கப்பட்டது, உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுப் பாதிப்புக்குள்ளானேன் என கூறினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

குற்றவாளிகளை நேரில் பார்த்தது நான், நளினி உள்ளிட்ட 6 பேர் தண்டனை பெற்றார்கள். அவர்களுக்குத் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. 31 ஆண்டுகள் ஆயில் தண்டனை பெற்று தற்போது குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கக்கூடிய சட்டங்கள் மூலம் விடுதலை ஆகி உள்ளனர்.நளினி என்னைப் பார்த்ததே இல்லை என தெரிவித்திருக்கிறார்.

போலீஸ் உதவியுடன் தான் என்னை அடையாளம் காண்பித்தார் என்று பேட்டி அளிக்கிறார். என்னுடைய சாட்சியை வைத்துக்கொண்டு மட்டும் நளினியை கைது செய்யவில்லை. தண்டனை தரவில்லை. 1000-ற்கும் மேற்பட்ட சாட்சிகள் வைத்து தான் தண்டனை கொடுத்தார்கள். ஆப்போ நீதிபதிகள் தவறானவர்களா என அனுசுயா கேள்வி எழுப்பினார்.

நான் பொய் சாட்சி என்றால் அப்பொழுது நீதிமன்றம் பொய் சாட்சிகளை வைத்து அவர்களுக்குத் தூக்குத் தண்டனை கொடுத்து விட்டதா? குண்டுவெடிப்பின் போது நான் நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இல்லை இந்திராகாந்தி சிலை அருகில் தான் இருந்தேன் என்று பொய்யாக நளினி தெரிவித்து வருகிறார். ஆனால் அன்றைய வெளியில் வந்த பத்திரிக்கையில் கூட்டத்தில் இருப்பது தெரிய வருகிறது.முருகன் என்னுடைய கணவன் என்று அவர் தெரிவித்திருக்கிறார். முருகன் என்பவர் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர். அப்படி என்றால் விடுதலைப் புலிகளைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தவர் நளினியா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், முருகன் விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள் என்றால் அதன் கொள்கையின்படி திருமணம் செய்து கொள்ள முடியாது. திருமணம் செய்து கொண்டால் எப்போது அவர் திருமணம் செய்தார். அவர் எப்படி கர்ப்பம் ஆனார் என்பது தெளிவுபடுத்தவில்லை. பொய் மேல் பொய் சொல்லி வருகிறார் நளினி எனக் கூறினார்.

நளினி விடுதலையாகி வெளியில் வரும் பொழுது பூ வைத்து வருகிறார் ஆனால் அவர்களால் எந்த பேர் பூ இழந்துள்ளனர். நளினி ஒரு துரோகி, கொலைகாரி, தற்போதாவது நான் தான் கொலை செய்தேன் என்று ஒப்புக்கொண்டு இந்திய மற்றும் தமிழக மக்களிடையே நளினி மன்னிப்பு கேட்க வேண்டும்.தீவிரவாதத்தில் போராடினால் வெற்றி கிடைக்காது அகிம்சை வழியில் போராடுவது தான் நேர்மையான வழி தீவிரவாதத்தில் ஈடுபட்ட இலங்கையின் நிலைமை இன்று நாம் பார்க்கிறோம், ஒன்றும் அறியாத மக்களின் உயிரை எடுக்கும் தீவிரவாதத்தை ஒழிப்போம்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஊரும் உணவும் திருவிழாவை கொண்டாடிய மதுரை மக்கள்!

G SaravanaKumar

ரோகித் அரை சதம்: 184 ரன்கள் குவித்தது இந்திய அணி

Halley Karthik

பிரதமர் மோடி தமிழகம் வருகை – ஏற்பாடுகள் தீவிரம்

EZHILARASAN D