இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறிகளுடன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பட்டு வந்தது. கடந்த 6 நாட்களாக மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வந்த அவர், கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தார். இதனைத் தொடர்ந்து நல்லகண்ணு நேற்று மாலை வீடு திரும்பினார்.







