ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பெரியாரையும், அம்பேத்கரையும் படிக்க வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சேகுவேராவின் நினைவு தினத்தையொட்டி சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகத்தில் அவரது படத்திற்கு திருமாவளவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், திமுக பொதுக்குழுவில் திமுக தலைவராக மு.க ஸ்டாலின் 2வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் எனவும் முக்கிய பொறுப்புகள் ஏற்றுள்ள கனிமொழி, டி.ஆர்.பாலு, துரைமுருகன் உள்ளிட்டோருக்கும் வாழ்த்துகள் கூறுவதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சனாதன சக்திகள், மத சார்பின்மை மற்றும் சமூக நீதியை சிதைத்து அழித்தொழிக்கும்
நிலையில், 2வது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது
தலைமை பொறுப்பு தமிழ்நாட்டு அளவில் மட்டும் செயல்படுவதாக அல்லாமல் இந்திய
அளவில் கவனம் செலுத்துவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு எதிர்ப்பு உள்ளது. அக்டோபர் 11ம் தேதி, தமிழகம் முழுவதும், 500 இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெற உள்ளது. அக்டோபர் 11ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை சென்னையில் அண்ணாசாலையில் பெரியார் சிலை முதல் அண்ணா மேம்பாலம் வரை மனித சங்கிலி நடைபெறும். தமிழ்நாட்டில் வலது சாரிகளுக்கு இடமில்லை என எச்சரிக்கும் வகையில் வரலாற்றை படைக்க கூடிய வகையில் அமையும். அனைவரும் இந்த போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
சாதி, மதம் இல்லாமல் இந்து சமூக இயங்க முடியாது பல ஆயிரம் ஆண்டுகளாக இவை மக்கள் வாழ்வில் பின்னி பிணைந்துள்ளது. அவர் மிகவும் பாதுகாப்பான இடத்தில், இருப்பதால், வெகு இலகுவாக இதை கடந்து செல்லலாம் என அவர் நினைக்கிறார். சாதியும் மதமும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை பாதிப்படைய செய்துள்ளது, இழிவுபடுத்தியும் கொடுமை செய்து கொண்டிருக்கிறது என்பதை மோகன் பகவத் முதலில் ஒத்துக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை கலைவதற்கு என்ன வழி என அவர் கண்டறிய வேண்டும். மோகன் பகவத் பெரியாரையும் அம்பேத்கரையும் படிக்க வேண்டும். சாதி மத கொடுமைகளை துடைத்தெரிந்திட சமத்துவத்தை நிலைநாட்ட மோகன் பகவத் முன் வர வேண்டும் என கூறினார்.
தெலங்கானா முதலமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பு குறித்த கேள்விக்கு, எக்காரணத்தை கொண்டும் பாஜக ஆட்சிக்கு வருவதற்கான சூழல் வர கூடாது அதற்கு ஏற்ப அவரது அரசியல் முடிவுகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தினேன், அதை கேட்டு அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பாஜகவை கண்டு பெரிதாக அலட்டிகொள்ள வேண்டாம் என சொன்னார். பாஜகவை எளிதாக வீழ்த்த முடியும் தூக்கிய எறிய முடியும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர், தனக்கு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா முழுவதும் காலசூழல் பாஜகவுக்கு எதிராக திரும்பி கொண்டிருக்கிறது. பாஜகாவின் கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக வெளியேறி வருகின்றன. சனாதன சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் என்பதையே முதன்மைப்படுத்தி வருவதாக கூறினார்.