கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
சீனாவில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் பரவியது. இதைக்கட்டுப்படுத்த உலக வல்லரசு நாடான அமெரிக்கா முதல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வாக உள்ளது. உலகின் பல நாடுகளில் பல்வேறு வகையான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்தியாவில் பிரதான தடுப்பூசிகளாக கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அதுதவிர மாடர்னா, ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு முன்னதாக அனுமதி அளித்திருந்தது. நேற்று ‘ஜான்சன் & ஜான்சன்’ நிறுவனத்தின் ஒருமுறை மட்டும் செலுத்தக்கூடிய தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது.
கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டு தவணையாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்துவது பாதுகாப்பானது எனவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.