35.8 C
Chennai
June 28, 2024
தமிழகம் செய்திகள்

கோடியக்கரை சரணாலயத்தில் குவியத் தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்!

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு கால நிலை மாற்றத்தால் வெளிநாட்டுப் பறவைகள் முன்கூட்டியே வந்து குவியத் துவங்கியுள்ளன.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கபடும் கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான்,  ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு சுமார் 200  வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
தற்போது காலநிலை மாற்றுவதனாலும், ஆர்டிக் பிரதேசத்தில் நிலவும் குளிரை போக்கவும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் இறுதியில் வரவேண்டிய பறவைகள் முன்கூட்டியே ஆயிரக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளன.
தற்போது சரணாலயத்திற்கு கூழைகிடா, பூநாரை, கடல் ஆலா, உள்ளான் உள்ளிட்ட பறவைகள் வரத் துவங்கி உள்ளது. பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்து இரைதேடுவதையும் ,பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும்  பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.
இந்த பறவைகளை  இரட்டைதீவு, கோவை தீவு ,நெடுந்தீவு,  உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் எனவும் , படிப்படியாக பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading