மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயிலில் ஆடி குண்டம் திருவிழாவை முன்னிட்டு, கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி வன பத்திரகாளியம்மன் கோயில் அம்மன் திருத்தலங்களில் மிக முக்கியமான ஆலயமாக திகழ்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்திலும் பவானி நதிக்கரையிலும் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடி குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ஆடி குண்டம் திருவிழா நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்ற நிலையில் வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. மேலும் வானவேடிக்கை நிகழ்வையொட்டி அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளிய அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னா் தொடர்ந்து கோயில் முன்பு கண்கவர் வாணவேடிக்கைகள் நிகழ்த்தபட்டன. வானில் ஜொலித்த பல வர்ண வெடிகள் வட்ட வடிவில் சுழன்று சுற்றிய மத்தாப்பு உள்ளிட்டவை காண்போரை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து அம்மனை தரிசித்து வானவேடிக்கையை கண்டு களித்தனர்.
—ரூபி.காமராஜ்