மாண்டஸ் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல், தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது, இன்று மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் வடதமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தென் ஆந்திர கடற்கரைகளைப் பகுதிக்கும் ஸ்ரீஹரி கோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரத்தைச் சுற்றி கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தைச் சுற்றிய பகுதிகளில் கரையைக் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரையைக் கடக்கும் போது குறைந்தபட்சம் மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், ராணிப்பேட்டை, சென்னை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் காற்று மற்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.